Search

admin

May 11, 2026

உள்ளூர்

கண்தானத்தில் முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை மக்கள்!


இலங்கையில் வாழும் மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த வங்கிக்குக் கிடைத்த 17,000 விழிவெண்படலங்கள் 12,000 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், ஏனைய நாடுகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு இணங்க, 4,000 முதல் 5,000 வரையிலான விழிவெண்படலங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான இந்த தேசிய கண் வங்கியிடமிருந்து விழிவெண்படலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து விசேட கேள்வி நிலவுவதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All