
Rebecca
Feb 9, 2026
உள்ளூர்
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 878 பேர் போதைப்பொருட்களுடன் கைது

நாடாளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 878 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 881 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 02 பேர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 415 கிராம் ஹெரோயின், 565 கிராம் ஐஸ், 159 கிராம் 490 மில்லிகிராம் கொக்கெய்ன், 07 கிலோகிராம் 966 கிராம் கஞ்சா, 528 கஞ்சா செடிகள், 01 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 118 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 3,403 போதை மாத்திரைகள், 40 கிலோகிராம் 26 கிராம் 280 மில்லிகிராம் மதளமோதகம் மற்றும் 614 கிலோகிராம் 288 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






