
sath
Dec 25, 2025
உள்ளூர்
வானிலை நிலவரம்

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடையிடையே லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மிதமான முதல் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், மேலும் களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதாலும் மின்னல் தாக்கங்களாலும் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






