Search

Dec 22, 2025

உள்ளூர்

தையிட்டி விகாரை தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என அமைச்சர் அறிவிப்பு

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதையும், விகாரையின் விஹாராதிபதிக்கு வழங்கப்பட உள்ள பதவி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நேற்று (21) விகாரை முன்பாக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், மேலும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All