Search

Dec 22, 2025

உள்ளூர்

கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விடுக்கப்பட்டிருந்த வெளியேறல் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) இன்னும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிபே பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன, மத்துரட்ட, ஹங்குரன்கெத மற்றும் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மூன்றாவது கட்ட வெளியேற்றல் சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

மேலும், பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஹசாலி ஹேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை இல்லாத வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவு மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடமேல் மாகாணம், அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All