MuSHArraf
Aug 24, 2025
உள்ளூர்
நாட்டை மீட்ட தலைவரை சிறையில் தள்ளுவதா..! ரணிலின் கைதுக்கு எதிராக அலி சப்ரி போர்க்கொடி
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டைச் சரிவில் இருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார், அப்படியான ஒரு தலைவரை அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் சிறையில் அடைப்பதா என முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு வெளியிட்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாகக் கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All