
Rebecca
Feb 2, 2026
உலகம்
ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு வீட்டு திட்டத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் இரண்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு வழக்கு நிலம் வழங்கியதில் முறைகேடு. மற்றொரு வழக்கு ரஜுக் புதிய நகரம் திட்டத்தின் கீழ் பிளாட் ஒதுக்கியதில் முறைகேடு ஆகும்.
அவரது மருமகள் துலிப் ரிஸ்வானா சித்திக் என்பவருக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், அஸ்மினா சித் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளிலும் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






