
janani
Apr 28, 2026
உள்ளூர்
8 மாகாணங்களுக்கு இடி மின்னல் குறித்து கடும் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் விடுக்கப்பட்ட இந்த விசேட காலநிலைப் பாதிப்பு குறித்த எச்சரிக்கையானது, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலின்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





