Search

admin

Feb 9, 2026

உலகம்

உக்ரைன் ஒடேசா மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

கடந்த வாரம் மாஸ்கோவில் ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது நடந்ததாக கூறப்படும் கொலை முயற்சிக்கு உக்ரைன் பாதுகாப்பு சேவை உத்தரவிட்டதாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாக போலந்து உளவுத்துறை செயல்பட்டதாகவும் , ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை கூறியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் எந்தவிதமான தெளிவான ஆதாரங்களையும் ரஷ்ய அதிகாரிகள் வெளியிடவில்லை. இதனால், இந்த குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் சந்தேகத்திற்குரியவையாக பார்க்கப்படுகின்றன.

ஜெனரல் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் படுகாயமடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் உக்ரைனில் பிறந்த ஒரு ரஷ்ய குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துபாயிலிருந்து மாஸ்கோவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நபர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என விசாரணை நடைபெற்று வருகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All