Rebecca
Dec 1, 2025
Breaking
பாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில் தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
…………………………………….
வரவு செலவு திட்ட விவாதங்களுக்கான குழுநிலை அமர்வு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முடிவடையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
டிசம்பர் 3ஆம் திகதி காலை 09.00 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்று சபாநாயகர் மேலும் கூறினார்.
பாராளுமன்றம் இன்று காலை 9.00 மணிக்கு டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் தொடங்கியது.
பாராளுமன்றம் நடவடிக்கைகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டுமா என்பதை பரிசீலிக்க சபாநாயகர் அமர்வை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சபாநாயகரால் பாராளுமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
…………………………………….
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.00 - மு.ப. 09.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 10.30 - பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள்,
i. இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு.
ii. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு.
பி.ப. 6.00 – நள்ளிரவு 12.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள்,
i. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
ii. சுற்றாடல் அமைச்சு.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







