Search

janani

Apr 27, 2026

உள்ளூர்

மே தின பேரணியில் ஒன்றிணைய UNPக்கு உத்தியோகபூர்வ அழைப்பு!

எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மே தினப் பேரணியில் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள பி.டி.சிரிசேன மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"நாட்டைப் பற்றி சிந்தித்து நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய முற்போக்கு சக்திகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்" என அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All