Search

admin

Apr 30, 2026

உள்ளூர்

இயற்கையைப் பாதுகாக்க ஒரு புதிய முயற்சி!


மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

  ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 கடந்த 'டித்வா' (Ditwa) புயலின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. 

 இதனால் மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து போஷிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது கடுமையாக வலியுறுத்தினார். 

 இதன்படி, மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிந்து, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்காகத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

 இந்த நடைமுறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், 

 அதற்கான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. அத்தனை முன்மொழிவுகளையும் கருத்திற் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கினார்.








Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All