
janani
Jul 16, 2026
உள்ளூர்
இலங்கை கடற்படையின் புதிய தளபதி பிரதமருடன் சந்திப்பு!

இலங்கை கடற்படையின் 27ஆவது தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (16) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். புதிய தளபதியாகப் பதவியேற்ற பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவர் சந்திக்கும் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு இதுவாகும்.
இச்சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளிலும் கடற்படை ஆற்றிவரும் தனித்துவமான பணிகளைப் பிரதமர் இதன்போது பாராட்டியதுடன், வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் புதிய கடமைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






