
janani
May 2, 2026
உள்ளூர்
மாலபே சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசம் : 22 இளைஞர்கள் கைது!

மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அருகில் கவனயீனமாக மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்கள், அந்த மோட்டார் சைக்கிள்களுடன் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இளைஞர் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக கடுவலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 'வட்ஸ்எப்' குழுவொன்றின் ஊடாக இணைந்து இந்த இடத்திற்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இலங்கையில் பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவலைப் பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 05ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





