
Rebecca
Jan 22, 2026
உலகம்
நியூசிலாந்தின் சுற்றுலா முகாமில் பாரிய மண்சரிவு- பலர் மாயம்!

நியூசிலாந்தின் மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் முகாம் ஒன்றில் இன்று (22) காலை மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளின் கூரைகள் மீது இருந்த குடும்பங்களை மீட்புப் படையினர் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.
மண்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய 30 மணிநேரத்தில் தவுரங்கா நகரில் மட்டும் 295 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மவுண்ட் மௌங்கனுய் தவிர, பாப்பமோவா மற்றும் ஆக்லாந்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் மண்சரிவு மற்றும் ஆற்று வெள்ளத்தால் பலர் மாயமாகியுள்ளனர்.
மண் ஏற்கனவே அதிகளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால், மேலும் மழை பெய்தால் மரம் விழுதல் மற்றும் கூடுதல் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது.
ஐந்து பிராந்தியங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






