
Rebecca
Feb 21, 2026
உள்ளூர்
8 இலட்சம் ரூபா செலவில் காதலர் தினம் கொண்டாடியவர் கைது

எட்டு இலட்சம் ரூபா செலவு செய்து காதலர் தினம் கொண்டாடிய நபர் ஒருவர் கம்பஹா பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு அவற்றை அடகு வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சந்தேகநபர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாதவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பல அடகுக் கடைகளில் அவர் அடகு வைத்த நகைகளை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் கடந்த 12ம் திகதி வீடொன்றில் கொள்ளையடித்த தங்க நகைகளை அடகு வைத்து பெற்ற 8 இலட்சம் ரூபாவினை செலவு செய்து 14ஆம் திகதி அவருடைய மனைவியுடன் காதலர் தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






