Search

Nov 2, 2025

உள்ளூர்

கடல் வழியாக இலஙகை கடத்த முயன்ற பக்தி பாக்கெட்டுகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம்  தனுஷ்கோடி அடுத்த சேரன்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் ஜானகி தலைமையில் கியூ பிரிவு பொலிஸார்  சேரான் கோட்டை கடற்கரை பகுதியை  இன்று அதிகாலை  கண்காணித்தனர்.



இதன் போது கோவை மாவட்டம்  பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில்  12 அட்டைப் பெட்டிகளில் இருந்த  720 கொசு விரட்டும் பத்தி பெட்டிகளுடன் வாகனத்தின் சாரதி உட்பட   இருவர் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்த போது இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.



 விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக  கடத்துவதற்காக 12 அட்டைப்பெட்டிகளில் கொசு விரட்டும் பத்திகளை  இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. பத்திகள், சரக்கு  வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து   ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் இடம்  கியூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All