
Rebecca
Feb 21, 2026
உலகம்
பிலிப்பின்ஸில் மண்சரிவு – 7 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் நேற்று (20) அதிகாலை மண்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் மண்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






