
admin
Jun 11, 2026
உலகம்
பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் குவைத் நடவடிக்கை.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்புப் பதற்றத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய தினம் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஈரானிய தாக்குதல்களின் பின்னணியில், பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியது.
அத்துடன் நாட்டின் பிரதான சர்வதேச வானூர்தி நிலையத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டதையடுத்து, வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், வானூர்தி நிலைய நடவடிக்கைகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தாமதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டிருந்த பல வானூர்தி சேவைகள் மீளத் தொடங்கப்பட்டுள்ளன.
பயணிகள் வானூர்தி நேர அட்டவணைகள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட வானூர்தி சேவைகளிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, குவைத் பாதுகாப்பு மற்றும் வானூர்திப் போக்குவரத்து அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





