
Rebecca
Jan 6, 2026
உள்ளூர்
ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இளைய மகன் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ ஆகியோரை ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்கான நேற்றைய தினம் அவர் நிதி குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையான போதே, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






