Search

admin

Jan 21, 2026

உள்ளூர்

இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் நேற்று சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All