
Rebecca
Dec 19, 2025
உள்ளூர்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்தார்.
புதன்கிழமை (17) நடைபெற்ற சந்திப்பின் போது, திட்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் இந்தியா இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிக்கு இந்திய அரசுக்கும் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் ஜீவன் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பேரழிவு காரணமாக தோட்டங்கள் உட்பட மலையகப் பகுதிகளில் தற்போதைய நிலைமை குறித்தும் அவர் இந்திய தூதரிடம் விரிவாக விளக்கினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் மீட்சிக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை ஜீவன் தொண்டமானுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதியளித்தார்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






