
janani
Apr 29, 2026
உள்ளூர்
போக்குவரத்து தொடர்பான முக்கிய கலந்துரையாடல்!

போக்குவரத்து தொடர்பான முக்கிய விடயங்களை ஆராயும் உப குழுக்கூட்டம் நேற்று (28) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்கள் வரவேற்புரை மற்றும் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிக் கூறினார்.
இக்கூட்டத்தில் முந்தைய கூட்ட முடிவுகளின் முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டிற்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்களின் நிலை, கிராமப்புற வீதி அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும் மாகாண போக்குவரத்து பணியகத்தின் 2026 திட்டங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் திருகோணமலை மையப்பகுதி அபிவிருத்தித் திட்டம், கந்தளாய், கிண்ணியா, மொறவெவ மற்றும் கோமரங்கடவல நகர அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அத்துடன், பேருந்து நிலையங்களின் பிரச்சினைகள், மாணவர்கள் போக்குவரத்து சேவையின் நிலை, திருகோணமலை பேருந்து நிலைய அபிவிருத்தி முன்மொழிவுகள், கந்தளாய் மற்றும் திருகோணமலை ரயில் நிலைய அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவையும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து பொலிஸாரின் பரிந்துரைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





