
admin
Jun 24, 2026
உள்ளூர்
பனைத்துறையின் எதிர்காலம் குறித்து முக்கிய ஆலோசனை!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்கால திட்டங்கள், பனைசார்ந்த உற்பத்திகள் தொடர்பாகவும் அதன் அபிவிருத்தி குறித்தும் விசேட கலந்துரையாடல் நேற்றைய (23.06.2026) தினம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி அதிகார சபை தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





