Search

Rebecca

Feb 9, 2026

உலகம்

19 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் பட்டத் திருவிழா

19 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் பசந்த் எனப்படும் பட்டத் திருவிழா இடம்பெற்றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பட்டத் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.

பட்டம் விடும் நூல்களின் கூர்மை காரணமாக பல விபத்துக்கள் இடம்பெறுவதால் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இடம்பெற்ற பட்டத் திருவிழாவில் சிறுவர்கள் உட்பட பெரியோரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பட்டங்களை விடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All