
janani
Apr 2, 2026
உள்ளூர்
கடத்தல் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வரை: நீடிக்கும் பிள்ளையான் மீதான பிடி!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), இன்று பிற்பகல் 2.10 மணியளவில் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்
பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிள்ளையான் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் இன்று சட்ட மருத்துவ அதிகாரியிடம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும் பிள்ளையான் மற்றும் அவரது தரப்பினரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மைக்காலமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






