Search

admin

Feb 10, 2026

உள்ளூர்

6-வது நாளாக தொடரும் மீனவர் போராட்டம்

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. 

ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All