
admin
Apr 14, 2026
உலகம்
125 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் இராணுவத் தளபதி

ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் இராணுவத் தளபதியாக நியமிக்கஅவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் 125 ப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இராணுவக் கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக (Chief of Joint Capabilities) பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle) புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 55 வயதான இவர், எதிர்வரும் ஜூலை மாதம் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிமோன் ஸ்டூவர்ட்டிடம் இருந்து பொறுப்புகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
1987 ஆம் ஆண்டு ஒரு சாதாரண இராணுவ வீரராக (Reservist) தனது பணியைத் தொடங்கிய சூசன் கோய்ல், கடந்த 37 ஆண்டுகளாக இராணுவத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இவர் மூன்று முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளதோடு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க இராணுவப் போர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார்.
கிழக்கு திமோர், சாலமன் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போர் முனை மற்றும் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்ட விரிவான அனுபவம் இவருக்கு உண்டு.
அவுஸ்திரேலிய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் படையில் தற்போது சுமார் 21% பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், 2030 ஆம் ஆண்டளவில் இதனை 25% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“உங்களால் பார்க்க முடியாத ஒன்றாக உங்களால் மாற முடியாது” (You cannot be what you cannot see) என்ற வாசகத்திற்கு இணங்க, சூசன் கோய்லின் இந்த நியமனம் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உந்துதலாக அமையும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





