
admin
Jun 23, 2026
உள்ளூர்
சுரேஷ் சலேவுக்காக பாப்பரசரிடம் உதவி கோரிய குடும்பத்தினர்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அது தொடர்பான கடிதம் இலங்கையிலுள்ள பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியான அப்போஸ்தலிக்க நுன்சியோ ஆயரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, சுரேஷ் சலேயின் குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுரேஷ் சலே தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சில ஆயர்கள் ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்துக்களை வெளியிட்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





