Search

janani

Apr 4, 2026

உலகம்

ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு முகாம் ஒன்றின் மீது வெடிப்பு சம்பவம் : பதற்றம் தீவிரம்!

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை (UNIFIL) முகாம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு லெபனானில் உள்ள எடைசா (El Adeisa) பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு முகாம் ஒன்றின் மீது நேற்று (ஏப்ரல் 3, 2026) மதியம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த வெடிப்பில் மூன்று அமைதிப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது அல்லது தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை என UNIFIL ஊடகப் பேச்சாளர் கண்டிஸ் ஆர்டியல் (Kandice Ardiel) தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All