Search

admin

Jun 23, 2026

உள்ளூர்

ஹோமாகம, மஹரகம, பன்னிபிட்டிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (24) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (25) மாலை 6.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

லபுகம மற்றும் கலட்டுவாவவிலிருந்து மஹரகம வரை நீரை விநியோகிக்கும் பிரதான விநியோகக் குழாய்க்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அச்சபை அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All