Search

admin

Jan 20, 2026

உள்ளூர்

யாழில் முதியவர் உயிரிழப்பு : இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All