Search

janani

Jun 14, 2026

உள்ளூர்

முதியோர் கொடுப்பனவு நாளை ஆரம்பம்!

2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதன் பணிப்பாளர் சதுர மிகிதும், முதியோர்களை 'அஸ்வெசும' தரவுத்தளத்தில் இணைத்து, அதன் ஊடாகக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஏற்கனவே நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, கடந்த மே மாதம் 29ஆம் திகதியே அவர்களது வங்கி கணக்குகள் ஊடாகப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்போது அஸ்வெசும வங்கி கணக்குகள் இல்லாத அல்லது கணக்குச் சிக்கல்கள் காரணமாகக் கொடுப்பனவுகளைப் பெறாத முதியோர்களுக்கே, அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பணம் வழங்கப்படவுள்ளது."

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All