Search

Rebecca

Dec 3, 2025

உள்ளூர்

அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றில் மௌன அஞ்சலி

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (03) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்கவின் வேண்டுகோளின்படி இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்படி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலியில் ஈடுபட்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All