Search

Rebecca

Mar 1, 2026

உலகம்

UAE ஐ இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் விபரம்

தமது நாட்டுக்கு எதிராக, ஈரான் நேற்றைய (28) தினத்தில் மாத்திரம் 137 ஏவுகணைகளையும், 209 ட்ரோன்களையும் ஏவியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குள்ள முக்கிய ஹோட்டல்கள் மற்றும் அலுவலங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அபுதாபி விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் சுமார் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் சர்வதேச விமான போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாய் விமான நிலையமும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அங்கு நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All