
Rebecca
Jan 31, 2026
உள்ளூர்
கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ரயில் நிலையங்களுக்கிடையிலான சமிஞ்சை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளே இதற்கு காரணமாகும்.
இதனூடாக எதிர்காலத்தில் குறித்த ரயில் மார்க்கங்களில் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். குறித்த இரு தினங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






