
SEGU
Nov 22, 2025
Breaking
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி

கொழும்பு - கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று காலை கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டு மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் சிலர், தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது துரிதப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த வர்த்தக நிலையமானது, சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்துவதற்கு பிரபலமானது எனவும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






