Search

admin

Apr 19, 2026

உள்ளூர்

சித்திரைப் புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட மோதல்

ஆணமடுவ, கரம்பேவ பிரதேசத்தில் நேற்று (18) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் ஆணமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய பகைமை காரணமாக இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அது கைகலப்பாக மாறியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த மோதலில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 20 பேர் வரை ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All