Search

Feb 14, 2026

உள்ளூர்

அபாயகரமான மருந்துகள் தொடர்பில் சுற்றறிக்கை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி புதிய திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன. 

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட 2023 மார்ச் 03 ஆம் திகதியிடப்பட்ட JSC/SEC/ClR/2023 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி, ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரு வருட காலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் விஷ வகைகள், அபின் மற்றும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All