
janani
May 5, 2026
உள்ளூர்
செம்மணி புதைகுழி: குழந்தை உட்பட 4 என்புக்கூட்டுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 7ஆம் நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டன.இந்த அகழ்வில், குழந்தை ஒன்றின் என்புக்கூட்டுடன் சேர்த்து மொத்தம் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை இந்த புதைகுழியில் 250 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 247 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சில முக்கிய சான்றுப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன், அவை நாளை அகழ்ந்து எடுக்கப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்றும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





