
admin
Jun 6, 2026
உள்ளூர்
டெங்கு மற்றும் மலேரியாவைத் தடுக்க விழிப்புணர்வு!

தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என தேசிய மலேரியா தடுப்பு நுளம்பு கட்டுப்பாட்டு பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க எச்சரித்துள்ளார்.
நுளம்புகளினால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்த்தொற்றுகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும், அவை பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது என மருத்துவர் சேரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நுளம்புகளுடன் தொடர்புடைய நோய்கள் தொடர்ந்து பொது சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக விளங்குவதாகத் தெரிவித்த அவர், தொடர்ச்சியான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை பொதுமக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





