Search

janani

Apr 4, 2026

உள்ளூர்

நீர்வெட்டு கால அளவை குறைக்க அவதானம்..

கொழும்பின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு காலத்தைக் குறைப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு நேரத்தை 8 அல்லது 12 மணித்தியாலங்கள் வரை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார குறிப்பிட்டார். 

வறட்சியான வானிலைக்கு மத்தியில் நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் வழங்கலைத் தற்காலிகமாக நிறுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்திருந்தது. 

எவ்வாறாயினும், 24 மணித்தியாலங்கள் நீர் வழங்கல் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அந்த நேரத்தை 18 மணித்தியாலங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகச் சபை நேற்று அறிவித்திருந்தது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All