
Rebecca
Feb 13, 2026
உள்ளூர்
களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பியிடம் முறையீடு

முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவுச் செயற்பாடுகளை நேரடியாகப்பார்வையிட்டு நிலமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு விவசாயியிடமிருந்து 14 வீத ஈரப்பதன் உடைய 2500கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு முறிப்பிலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்களஞ்சியசாலையில் மாத்திரமே நெல்லை கொள்வனவுசெய்து சேகரித்து வைப்பதற்கான இடவசதிகள் இருப்பதாகவும், ஏனைய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் இன்மையால் நெற்கொள்வனவை மேற்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறாக நிலைமைகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டசெயலாளரைச் சந்தித்து நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவிற்கான களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






