Search

SEGU

Nov 29, 2025

Breaking

இதுவரை 123 பேர் உயிரிழப்பு! பலரை காணவில்லை

இயற்கையின் சீற்றத்தில் சிக்கி இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் 130 பேரை காணவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

மேலும் உயிரிழந்தவர்களில் 51 பேர் கண்டி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், 67 பேர் காணாமல் போயுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர், 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை கேகாலையில் ஒன்பது பேரும், மாத்தளையில் எட்டு பேரும், நுவரெலியாவில் ஆறு பேரும், அம்பாறையில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் 102,877 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

மேலும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 43,925 நபர்கள் 488 பாதுகாப்பு மையங்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் .


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All