Search

Nivin

Aug 27, 2025

உள்ளூர்

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிப்பு.

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிப்பு.

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லத்தத்தக்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை அக்டோபர் 17ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்கே மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டன.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதீ வாதிகளுக்கு எந்த அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவை அக்டோபர் 17ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp