Search

Rebecca

Nov 30, 2025

Breaking

உயர்தர பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக, இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்படவில்லை, எனவே பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட 1911 என்ற தொலைபேசி எண்ணுக்குப் பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், இதை ஊடக நிறுவனம், வலைத்தளம், சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தொடர்ந்து பரவலான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All