
janani
Apr 8, 2026
உலகம்
லெபனானின் சிடோன் நகரில் வான்வழித் தாக்குதல்

ஈரானுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையிலும், லெபனான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை.
லெபனானின் சிடோன் நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பொதுமக்கள் உயிரிலாந்துள்ளனர்.
ஈரானுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது, ஹிஸ்புல்லா அமைப்புக்கு பொருந்தாது என்பதை இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாகவே தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தடையின்றித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. சிடோன் பகுதியில் ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த காபி உணவகமாக இருந்த இடத்தைக் குறிவைத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





