
admin
May 24, 2026
உலகம்
சீன நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 80 பேர் உயிரிழப்பு!

சீனாவில் உள்ள ஷான்சி மாகாணம் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் சிக்கி 80 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த வேளையில், சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 201 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மீட்புப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உடலங்களை மீட்கும் பணிகளும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





