Search

admin

Apr 21, 2026

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்ட உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகளும், நீதியைக் கோரும் அமைதி பேரணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய இன்று காலை 8:45 மணிக்கு குண்டு வெடித்த நேரத்தில் அனைத்துத் தேவாலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படும்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All