
Rebecca
Jan 29, 2026
உலகம்
கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் பலி

கொலம்பியாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் அரசிற்கு சொந்தமான Satena விமான நிறுவனத்திற்குரிய விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Beechcraft 1900 எனப்படும் குறித்த விமானம் 15 பேருடன் பயணித்த நிலையில் வெனிசுலா எல்லையிலுள்ள அந்நாட்டின் Ocaña நகரை சென்றடைவதற்கு 11 நிமிடங்களுக்கு முன்னரே விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விமானத்தின் பாகங்கள் குறித்த நகரை அண்மித்துள்ள மலைப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






